அர்ஜெண்டினாவில் தொலைந்து போனதாகக் கருதப்பட்ட நபர் ஒருவரின் உடல், மீனவர் ஒருவர் பிடித்த சுறா மீனின் வயிற்றில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர் டியாகோ பரியா. இவருக்கு வயது 32. இந்நிலையில், இவர் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தனது குடும்பத்திடம் தெற்கு பிராந்தியத்தில் இருக்கும் சுபிட் கடற்கரைக்கு செல்வதாகச் கூறிவிட்டு க்வாட் பைக்கில் சென்றுள்ளார். அதன் பின் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை.
இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறை நடத்திய விசாரணையில், டியாகோவின் சேதமடைந்த வாகனத்தையும் ஹெல்மெட்டையும் மீட்டனர்.
இதனிடையே, கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சுபிட் கடற்கரையில் மீனவர் ஒருவரின் வலையில் சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளது. அதனை சுத்தம் செய்தபோது, மீனின் வயிற்றில் மனித உடல் பாகங்கள் இருந்ததை பார்த்து மீனவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து மீனவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததும், டியாகோவின் குடும்பத்தினர் அந்த மனித உடலின் பாகங்களை பார்த்தனர்.
அப்போது சுறாவின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மனித கை பாகத்தில் டியாகோவின் டாட்டூ இருந்ததை பார்த்த, அவரது மனைவி அது தனது கணவர் என உறுதியோடு கூறினார். இருப்பினும் டிஎன்ஏ சோதனைக்கு பிறகு தான் முடிவு தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக-உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் சொன்ன பதில்?