Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சருக்கே வந்த சோதனை! லிப்டில் சிக்கிக் கொண்ட பரிதாபம் !

    அமைச்சருக்கே வந்த சோதனை! லிப்டில் சிக்கிக் கொண்ட பரிதாபம் !

    சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் லிப்டில் சிக்கிக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரமாக மீட்கப்பட்டார். 

    சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தையும், பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு சென்றார். 

    இந்த நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததை அடுத்து அவர், 3-வது மாடியில் இருந்து தரை தளத்திற்கு லிப்டின் மூலம் இறங்கினார். அவருடன் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர். இந்நிலையில் லிப்ட் திடீரென நின்றது. 

    இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார் மற்றும் கல்வி இயக்குநர் சாந்தி மலர் ஆகியோர் லிப்டில் சிக்கிக் கொண்டார்கள். 

    இதையடுத்து லிப்ட் ஆப்ரேட்டர் உதவியுடன் ஆபத்து கால கதவின் (Emergency Exits) வழியே, சிக்கிக் கொண்டவர்களை வெளியேற்ற முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றன. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு அமைச்சர் மற்றும் அவருடனே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, லிப்ட் சரி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    பத்து ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல! முதல்வர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....