மனநலம் பாதித்த மகளை, பல முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 107 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் 45 வயதுடைய நபரின் மனைவி பல மாதங்களுக்கு முன்பு, தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார். இதனால் 13 வயது மனநலம் பாதித்த மகளை தந்தை என்று சொல்லப்படும் அந்த நபரே வளர்த்து வந்தார். இந்நிலையில், பலமுறை இவர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்.
இதையடுத்து, அந்தச் சிறுமி தனது பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களிடம் கூறிய பிறகே இந்தச் சம்பவம் வெளியே வந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமி, அந்த நபரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது தெரியவந்தது.
இந்நிலையில் அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்தக் குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 4 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயக்குமார் ஜான் உத்தரவிட்டார்.
நமக்கு நாமே மெசேஜ் செய்யலாம் – புதிய அம்சத்தை கொண்டுவரும் வாட்சப்