Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,600 கன அடியாக உயர்வு...

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,600 கன அடியாக உயர்வு…

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,600 கன அடியிலிருந்து 11,600 கன அடியாக உயர்ந்துள்ளது. 

    தமிழகத்தின் முக்கிய அணைகளில் முதன்மையாக பார்க்கப்படும் அணை மேட்டூர் அணை. இந்த அணையானது காவிரி ஆற்றுப்படுகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. 

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,600 கன அடியிலிருந்து 11,600 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-ஆவது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

    காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 11,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    கோல்டன் குளோப் விருதில் ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....