எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது.
2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் (ஜூலை 11) ஆகஸ்ட் 5-ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தாரா ஓ.பன்னீர்செல்வம்?