புயல் மற்றும் கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமனது மாண்டஸ் என்ற புயல் சின்னமாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் புயல் காரணமாக 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் எனவும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 9-ம் தேதி நாளை மற்றம் 10-ம் தேதி நாளை மறுதினம் என இரண்டு தினங்களுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு! எதற்கு தெரியுமா?