மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – புதுவை- தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 9 ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தில் நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும்.
மேலும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மாண்டஸ் புயல் எதிரொலி; அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்ட தேதி மாற்றியமைப்பு