Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு! அதிர்ச்சியில் பதறிப்போன பொதுமக்கள்

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு! அதிர்ச்சியில் பதறிப்போன பொதுமக்கள்

    இங்கிலாந்து மன்னர் மீது இளைஞர் ஒருவர் மூட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    வடக்கு இங்கிலாந்து பகுதியில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் பங்குபெற்றனர். ஆதலால், பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். அதோடு, மக்கள் மன்னருக்கும், ராணிக்கும் கரகோஷங்கள் எழுப்பி அவர்களை உற்சாகமடைய செய்தனர். 

    மேலும், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி உரையாடினர். அப்போது, மக்களோடு மக்களாக நின்றிருந்த இளைஞர் ஒருவர் மன்னர் மீது முட்டைகளை வீசுகிறார். 

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இளைஞர், ‘இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது..நீங்கள் மன்னர் அல்ல’ என்று கூறி மூன்று முட்டைகளை வீசினார். அவை மன்னர் மீது விழவில்லை. 

    இதைத்தொடர்ந்து, மன்னர் மீது முட்டைகளை வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கூடி இருந்த மக்கள் ‘கடவுளே..மன்னரை காப்பாற்றுங்கள்’ என்று முழக்கமிட்டனர். இச்சம்பவம் அங்கு கூடியிருந்த மக்களிடத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    முன்னதாக, கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் காலமானது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்ககிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவருக்கு இந்து கோவிலில் அரசு வேலையா? திருமணத்தால் எழுந்த புதிய சர்ச்சை..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....