Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவருக்கு இந்து கோவிலில் அரசு வேலையா? திருமணத்தால் எழுந்த புதிய சர்ச்சை..!

    கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவருக்கு இந்து கோவிலில் அரசு வேலையா? திருமணத்தால் எழுந்த புதிய சர்ச்சை..!

    இந்து கோயிலைச் சாராத நபருக்கு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் திருமண ஏற்பாடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலில் ஊழியராக பணிபுரிபவர் அப்பு ராஜா. இவரின் திருமணம் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இவர் வழங்கிய திருமண அழைப்பிதழில் மணமகனின் உறவினர்கள் என அந்தோணியம்மாள், அல்போன்சா போன்ற கிறிஸ்தவ பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

    இதைத்தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ஒருவர், அப்புராஜா பற்றி விசாரித்தார். அப்பொழுது அப்பு ராஜா கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர் என தெரியவந்தது. மேலும் அப்பு ராஜா மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உதவியாளர் பணியில் இருப்பதும் திமுக மயிலை பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருப்பதும் தெரியவந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இந்த சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் மயிலாப்பூர் கோயில் இணை ஆணையர் காவிரிக்கு கடிதத்தின் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி கோயில்களில் இந்து அல்லாதவரின் திருமணம் நடக்க அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றங்களும் தெரிவித்துள்ளன. இதை மீறியும் கிறித்துவரின் திருமணம் நடைபெற்றால் நீதிமன்றத்தை நாடப்போவதாக இந்து முன்னணி நிர்வாகி கடிதம் மூலம் புகார் அளித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து, அப்போது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அப்பு ராஜாவின் திருமணம் நடைபெறவில்லை. மேலும் கோயிலுக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    அதேபோல் இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் படி, இந்து மதத்தை சாராத ஒருவர் இந்து கோயிலில் பணி அமர முடியாது. இந்நிலையில் கிறித்துவரான அப்பு ராஜா எவ்வாறு இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பணி அமைத்தப்பட்டு இருப்பார்? என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த விவகாரம் குறித்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி, அப்பு ராஜா தன் திருமணம் கோயிலில் நடக்க அனுமதிக்குமாறு கேட்டபோது மறுக்க முடியவில்லை என்றும் அவர்கள் கிறித்துவ மதத்தை சார்ந்தவர் என்பது புகார் வந்த பின்பு தான் தங்களுக்கு தெரியவந்தது என்றும் தெரிவித்தார். மேலும், அப்பு ராஜாவை அழைத்து திருமணத்தை கோயிலில் நடத்த தடை விதித்து விட்டதாகவும், கோயில் ஐதீகம், ஆகமம், சம்பிரதாயம் எதுவும் இந்த விவகாரத்தில் மீறப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான கிரிக்கெட் வீரர்; தடை விதித்த இலங்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....