பாலியல் வழக்கில் சிக்கியுள்ள தனுஷ்கா குணதிலகா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
2022-ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கை வீரர் ஒருவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2-ஆம் தேதி 29 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ்கா குணதிலகா மீது புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, இலங்கை அணியின் வீரர் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக சிட்னி காவல்துறையினர் கைது செய்தனர்.
இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறாததால், அந்த அணியினர் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். தனுஷ்கா குணதிலகா கைதாகியுள்ளதால், அவர் மட்டுமின்றி இலங்கை அணி நாடு திரும்பியது.
இதைத்தொடர்ந்து, பாலியல் புகாரில் கைதான தனுஷ்கா மீதான புகார் தற்போது நிரூபனமாகியுள்ளது. ஆதலால், தனுஷ்கா குணதிலகா ஜனவரி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனுஷ்கா குணதிலகா முறையிட்ட ஜாமீன் மனுவை அந்நாட்டின் பாரமட்டா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.
இந்நிலையில், தனுஷ்கா குணதிலகா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதற்கு முன்னமும் விதிமுறைகளை மீறியதாக கூறி மூன்று முறை அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
மேலும், தனுஷ்கா குணதிலகா மீதான பாலியல் புகார் நிரூபணம் ஆனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்னதாக தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான்..