இமாச்சலப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தனது வாகனத்தை நிறுத்தி, அந்த வாகனத்திற்கு பிரதமர் மோடி வழிவிட்டு உள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில், வருகிற நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்க இருக்கிறது. இதையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே இமாச்சலப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, சம்பு என்ற பகுதியில் பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. அந்த சமயம் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிரதமர் மோடியின் இந்த உத்தரவை தொடர்ந்து, பாதுகாப்பு வாகனங்கள் ஓரமாக நிறுத்தப்பட்டன. ஆம்புலன்ஸ் சென்ற பிறகு, பிரதமர் மோடியின் வாகனங்கள் சென்றது.
பிரதமர் மோடியின் இத்தகைய செயல் சாலை விதிகளை கடைபிடிப்பதில் முன்மாதிரியாக மாறி இருக்கிறது.
தற்போது ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக பிரதமர் மோடி வழிவிட்ட காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.