மும்பையில் இன்று முதல் காரின் பின்புறம் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மராட்டியம் மாநிலம் தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 4 சக்கர வாகனங்களில் பின்புறம் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று மும்பை காவல்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு மும்பை 4 சக்கர வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் இந்த வித்திலிருந்து டாக்சி ஓட்டுனர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
காவல்துறை தரப்பில் இதற்கு, 4 சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் இல்லையென்றால், அந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாகவே நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மோர்பி பால விபத்து; விசாரணையை தொடங்குகிறதா உச்சநீதிமன்றம்..?