தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்புக்கான (பி.எட்)
விண்ணப்பப்பதிவு இணையவழியில் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் வியாழக்கிழமை வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சென்னை, புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை! ஒரே நாளில் தத்தளித்த தாம்பரம்
இந்நிலையில், தற்போது முதுநிலை கல்வியியல் படிப்புக்கான (எம்.எட்) மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் இன்று முதல் (அக்டோபர் 6-ம் தேதி) முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை www.tngasaedu.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதுநிலை கல்வியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.
முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18 முதல் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.