புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் மக்கள் குடியிருப்பு பகுதியில் மதுபான கடைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என கூறி அப்பகுதி மக்கள், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் மதுபான கடை திறப்பு எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் காமராஜர் மணிமண்டபம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் சாமிப்பிள்ளை தோட்டம் இ.சி.ஆர் ரோட்டில் உள்ள மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் புதியதாக மதுபான கடைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்றும், மீறி அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கி சீர்கெடும் அபாயம் ஏற்படும் என்றும், ஏற்கனவே இப்குதியில் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மதுபான கடைகள் திறக்கப்பட்டால் விபத்துக்கள் எண்ணிக்கை அதிகமாகும் என கூறியும் எனவே புதிய மதுபானம் கடைக்கு அனுமதி கொடுக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுபான கடை திறப்பு எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் காமராஜர் மணிமண்டபம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பெயர்ப்பலகையில் ஏன் இந்த பெயர் மாற்றம்? இந்தி திணிப்பா? தமிழ் மறைப்பா?