தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
1992 -ஆம் ஆண்டுமுதல் 1995-ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் ஔவை நடராசன். 87 வயதாகும் இவர் வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் நேற்று காலமானார்.
இவரின் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில்,
வைக்கப்பட்டிருந்த பூத உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து ஔவை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து, தந்தையைப் போலவே தமிழிலக்கியத்தில் நாட்டம் கொண்டு கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவித்த பெருந்தகை ஔவை நடராசன் அவர்களின் தமிழ்ப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
‘இருக்கு.. ஆனா இல்ல’ ; ட்விட்டரில் நிறுத்திவைக்கப்பட்ட ‘ப்ளூ டிக்’ ..