Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்'இருக்கு.. ஆனா இல்ல' ; ட்விட்டரில் நிறுத்திவைக்கப்பட்ட 'ப்ளூ டிக்' ..

    ‘இருக்கு.. ஆனா இல்ல’ ; ட்விட்டரில் நிறுத்திவைக்கப்பட்ட ‘ப்ளூ டிக்’ ..

    ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

    எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு சம்பவங்கள் ட்விட்டரில் நிகழ்ந்து வருகின்றன. இவற்றுள் ஒன்றாக,ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை (ப்ளூ டிக்) பெற மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.

    மேலும்,  ‘ப்ளூ டிக்’ பயனாளிகள் பதிலளிப்பதில், தேடுதலில், குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், போலி தகவல்களை அழிப்பதற்கு இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதைத்தொடர்ந்து, ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தும் முறையானது, இந்தியாவில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால், இந்த ப்ளூ டிக் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, எலான் மஸ்க் வகுத்துள்ள புதிய விதிமுறையால் பொய்ச் செய்திகளை பரப்பும் பல போலிக் கணக்குகளும் ப்ளூ டிக் பெற்று வருகின்றன. இந்த முறையினால் போலிச் செய்திகள் அதிகம் பகிரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

    மேலும், அதிகாரப்பூர்வ பக்கங்களை உறுதிப்படுத்துவதிலும் போலி கணக்குகளை நீக்குவதிலும் ட்விட்டர் நிறுவனம் கவனம் செலுத்தும் என்று பார்த்தால், கட்டணம் வசூலிப்பதிலேயே கவனாமக உள்ளனர் என்றும் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். 

    இந்நிலையில், எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை ‘ப்ளூ டிக்’ குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார். 

    இத்துடன், நிறுவனங்கள், தனிநபர்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் நிற வேறுபாடுகளுடன் பயன்படுத்த ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால், ட்விட்டர் பயனாளிகள் தற்போது ப்ளு டிக் இருக்கிறதா இல்லையா? அதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா வேண்டாமா? போன்ற கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

    சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சிர்க்கையால் அச்சத்தில் மக்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....