சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஆந்திர அமைச்சர் ரோஜா செல்வமணி நடனமாடி மகிழ்ந்தார்.
ஆந்திர மாநிலத்தில் தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக ரோஜா செல்வமணி இருந்து வருகிறார்.
இதனிடையே ஆந்திர மாநிலம் திருப்பதியில் நேற்று சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கலை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர் ரோஜா, திடீரென மேடை ஏறி மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். பிறகு கைகளால் மாணவிகளை நோக்கி முத்தமிட்டு மகிழ்ந்தார். தற்போது இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
“మన ప్రాచీన సంస్కృతి సాంప్రదాయ కళలను భావితరాలకు అందించడమే లక్ష్యంగా ఒక కళాకారునిగా కళాకారులకు అండగా ఉంటానని వారి అభివృద్ధికి కృషిస్తానని మాట ఇస్తున్నా..“ #YSJaganMarkGovernance pic.twitter.com/cfUlBEIeQ3
— Roja Selvamani (@RojaSelvamaniRK) November 19, 2022
பசி பட்டினி இல்லா நாடாக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…