Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுகமது ஜுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்

    முகமது ஜுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்

    ஆல்ட் செய்தி நிறுவனத்தின் துணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்திருக்க லக்கிம்பூர் கேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இரண்டு குழுக்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயல்பட்டதற்காக முகமது ஜுபைர் மீது சென்ற வருடம் உத்தரபிரதேசத்தில் உள்ள மொஹமடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் முகமது ஜுபைர் ஆஜராக வேண்டும் என லக்கிம்பூர் நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை (ஜூலை 09) அன்று உத்தரவிட்டிருந்தது.

    இதன் படி இன்று நடைபெற்ற இந்த வழக்கில் காணொளி வாயிலாக முகமது ஜுபைர் ஆஜரானார். அவர்மீது சட்டப்பிரிவு 153பி, 505(1) (பி) மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த லக்கிம்பூர் நீதிமன்ற நீதிபதிகள், முகமது ஜுபைரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

    2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி இரண்டு குழுக்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தியதற்காக முகமது ஜுபைர் மீது ஆஷிஷ் காடியார் என்னும் உள்ளூர் நிரூபர் ஒருவர் லக்கிம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த ஒரு வழக்கு மட்டுமல்லாது, இரண்டு வருடங்களுக்கு முன் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட காரணங்களுக்காக தில்லி காவல்துறை கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி முகமது ஜுபைரைக் கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து ஐந்து நாள்கள் தற்காலிக ஜாமினில் முகமது ஜுபைர் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தாரா ஓ.பன்னீர்செல்வம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....