கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பார்த்திபன். இவர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை மேய்ச்சல் முடித்து வந்த ஆடுகளை வீட்டின் பின்புறமாக இருக்கும் ஆட்டுப் பட்டியில் அடைத்தார். இதையடுத்து இன்று காலை பார்த்திபன் மேய்ச்சலுக்கு செல்ல பட்டியைச் சென்று பார்த்தபோது அங்கு 13 ஆடுகள் மர்ம விலங்கு ஏதோ ஒன்று கடித்து இறந்தது தெரியவந்தது. மேலும் சில ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.
இதன் காரணமாக, அவருக்கு கால்நடை வளர்ப்பில் 1.50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம விலங்கு ஏதோ ஒன்று கடித்து, ஆடுகள் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டையில் இருந்த கொண்டையை மறந்த ‘தளபதி 67’ படக்குழு; கண்டுபிடித்த ரசிகர்கள்!