Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்கிரண்பேடி விஷம் வைத்து கொன்றார்! தமிழிசை சர்க்கரை கொடுத்து கொன்று வருகிறார்! முன்னாள் முதலமைச்சர்

    கிரண்பேடி விஷம் வைத்து கொன்றார்! தமிழிசை சர்க்கரை கொடுத்து கொன்று வருகிறார்! முன்னாள் முதலமைச்சர்

    புதுச்சேரியில் எங்களது ஆட்சியை ஆளுநர் கிரண்பேடி விஷம் வைத்து கொன்றார். ஆனால் இப்போதைய என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை தற்போதைய ஆளுநர் தமிழிசை ரங்கசாமியை அண்ணன் என கூறி சர்க்கரை கொடுத்து கொன்று வருகிறார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். எங்களது ஆட்சியில் பட்ட துன்பங்களை ரசித்த ரங்கசாமி தற்போது அவரது ஆட்சியில் அனுபவித்து வருகிறார் என்றார்.

    புதுச்சேரயில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என சமூக அமைப்பினர் முதமைச்சரிடம் கோரிக்கை வைத்தபோது அவர்களிடம் பேசிய முதலமைச்சர் புதுச்சேரி மாநிலத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும், புதுச்சேரியில் கோப்புகள் தேங்கி இருக்கிறது. அதிகாரிகள் கேள்விகேட்டு திருப்பி அனுப்புகிறார்கள். மாநில அந்தஸ்து பெற முடியவில்லை, திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்காததற்கு மத்திய அரசும், தலைமை செயலாளர் தான் காரணம் என ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்பபடுத்தியுள்ளார் என்பதை சுட்டிகாட்டி, ரங்கசாமி கடந்த 2016-ல் நிபந்தனையின்றி மத்திய பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்தார் என்றும், மாநில அந்தஸ்து தேவை என்று மட்டுமே கூறி வந்தாரே தவிற டெல்லி சென்று மத்திய அரசை அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மாநில அந்தஸ்து வேண்டும் என கூறியிருந்தனர்.

    ஆனால் கூட்டணியில் உள்ள பாஜக மாநில அந்தஸ்தை பற்றி குறிப்பிடவே இல்லை என குற்றம்சாட்டினார். மேலும் என்.ஆர்.காங்கிரஸ் மாநில அந்தஸ்துக்காத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தனர் என்றும்,. ஆனால் இப்போது அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை என புலம்ப ஆரம்பித்து விட்டார். உங்களது கோரிக்கைகளை பாஜக ஏற்கவில்லையா? என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி, மத்திய அரசுக்கு இவர் என்ன அழுத்தம் கொடுத்தார். அனைத்து கட்சியினரை கூட்டி ஆலோசனை நடத்தினாரா? எதுவும் இல்லை. மாநில அந்தஸ்து பெற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், ரங்கசாமி ஒரு பொம்மையாக ஆட்சி நடத்தி வருகிறார் என்றும், கொள்கைகளை நிறைவேற்ற முடியாத அரசாக என்.ஆர். அரசு உள்ளது என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், மாநில அந்தஸ்து, பெற போராட தயாரா ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதற்காக, நாற்காலியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவுக்கு அடிபணிந்து போகிறார். இவர் முதலமைச்சராக இருக்கு ததகுதியற்றவர் என்றும், ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் ரங்கசாமி இதைவிட்டு ஓட தாயார் என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி, ரங்கசாமியும் மண் குதிரையும் ஒன்று, ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்றும், ஆளுநர் தமிழிசை அடிக்கடி முதலமைச்சரும் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம் என கூறி வருகிறார். அண்ணன் என கூறி முதலமைச்சர் ரங்கசாமியை தமிழிசை முதுகில் குத்தி வருகிறார் என்றும், எங்களது ஆட்சிக்கு கிரண்பேடி தொல்லை கொடுத்த போது ரசித்த முதலமைச்சர் ரங்கசாமி இப்போது அவரது ஆட்சியில் நாங்கள் பட்டதை அனுபவித்து வருகிறார் என்றும், கிரண்பேடி விஷத்தை வைத்து கொள்வார். ஆனால் தமிழிசை சவுந்தர்ராஜன் சர்க்கரை கொடுத்து கொன்று வருகிறார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    யானை லட்சுமி தங்கியி்ருந்த இடத்தில் திடீர் கால் தடம் தென்பட்டதால் பரபரப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....