Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு!

    கர்நாடகாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு!

    கர்நாடக மாநிலம் விஜயபுர மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

    கர்நாடக மாநிலம், விஜயபுராவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, 6.24 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

    மேலும், தொடர்ந்து பெலகவி மாவட்டம் அதானி அருகே உள்ள ஷிராஹத்தி கிராமத்திலும் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    மாநில பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் விஜயபுராவில் உள்ள கண்ணூர் கிராம பஞ்சாயத்திலிருந்து வட மேற்கே 2.3 கிலோ மீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 நாள்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடரும் நிலநடுக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....