Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கல்கிக்கான நன்றியை மணிரத்னம் செய்ய வேண்டும்- சமஸ் அறிவுரை!

    கல்கிக்கான நன்றியை மணிரத்னம் செய்ய வேண்டும்- சமஸ் அறிவுரை!

    சென்னை: கல்கிக்கான நன்றியை இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய செயல்பாட்டால் வெளிப்படுத்த வேண்டும் என பத்திரிக்கையாளர் சமஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

    இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு படக்குழு சார்பில் சென்னையில் நிகழ்ச்சி  நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம் ‘தன்னுடைய முதல் நன்றியைக் மறைந்த எழுத்தாளர் கல்கிக்குத் தெரிவித்தார். தற்போது உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் திரைக்கதை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

    இந்நிலையில் பத்திரிக்கையாளர் சமஸ், கல்கிக்கான நன்றியை இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய செயல்பாட்டால் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து பத்திரிக்கையாளர் சமஸ் தெரிவித்துள்ளதாவது: 

    “ இயக்குநர் மணிரத்னத்தின் உரையைக் கேட்டேன்; ‘பொன்னியின் செல்வன்’ விழாவில். தன்னுடைய முதல் நன்றியைக் கல்கிக்குத் தெரிவித்து, உரையைத் தொடங்குகிறார். வரவேற்புக்குரிய மரியாதை.

    நாடு தழுவிய படமாக ‘பொன்னியின் செல்வன்’ எடுக்கப்பட்டிருக்கும் சூழலில், அதற்கான எழுத்து சார்ந்த பங்களிப்பைக் கல்கியின் குடும்பத்துக்கு மணிரத்னம் செலுத்துவதே அவர் சொல்லில் வெளிப்படுத்தும் மரியாதைக்கு செயல்பூர்வ அர்த்தம் கொடுக்கும் என்று எண்ணுகிறேன்.

    அமரர் கல்கியின் எழுத்துகள் பொதுவுடைமை ஆகிவிட்டதால், சட்டபூர்வ நிர்ப்பந்தங்கள் ஏதும் மணிரத்னத்துக்கு இல்லை. அதேசமயம், தார்மிகரீதியாக இதை அவர் செய்வது அவசியம். 

    ‘கல்கி குழுமம்’ இன்று பிரகாசமான நிலையில் இல்லை. சொல்லப்போனால், கடும் நெருக்கடிகளுக்கு இடையில், கொரானாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் கல்கி தன்னுடைய உயிரென வளர்த்தெடுத்த ‘கல்கி’ அச்சிதழே நிறுத்தப்பட்டுவிட்டது.

    கல்கிக்கான நன்றியை இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய செயல்பாட்டால் வெளிப்படுத்த வேண்டும்; நானறிந்த வகையில் மேன்மையான மனிதர்; நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்! ” என்று அவர் தெரிவித்துள்ளார். 

    மேலும், மறைந்த இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் வெற்றிமாறன், ஞானவேல்ராஜா மற்றும் நடிகர் சூர்யா ஆகியோரை மேற்கொள்காட்டி எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு உரிய பங்கு – அடையாள நிமித்தமாக அல்ல; கண்ணியமான தொகையாக வழிங்கியுள்ளனர் என்பதையும் சமஸ் குறிப்பிட்டுள்ளார்.

    அமரர் கல்கிக்கு பெருமை சேர்க்கும் பொன்னியின் செல்வன்!

    பொன்னியின் செல்வன் டீசர் வெளியானது!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....