Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடரும் நிலநடுக்கம்!

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடரும் நிலநடுக்கம்!

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. 

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 2.34  மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. 

    அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கு 233 கி.மீ. தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    கடந்த சில தினங்களாக அவ்வபோது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அதேபோல், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

    இதற்கு முன்பு, இம்மாதம் 4 மற்றும் 5 தேதிகளில் 20 முறைக்கும் மேலாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    அந்தமானில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....