Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்விருந்தினர்கள் வருவாங்க....விழிப்புணர்வு தேவை - இன்றைய ராசிபலன்கள் இதோ!

    விருந்தினர்கள் வருவாங்க….விழிப்புணர்வு தேவை – இன்றைய ராசிபலன்கள் இதோ!

    மேஷம்:

    பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நிம்மதி நிலவும். பணியிடத்தில் பதட்டம் காணப்படும். திட்டமிட்டு பணியாற்றுங்கள். உங்கள் துணையுடன் நல்லுறவு காண சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும். தியானம் அல்லது யோகா சிறந்த பலனைத் தரும்.

    ரிஷபம்:

    உங்கள் அன்றாட நிகழ்வுகளில் விழிப்புணர்வு தேவை. பணிகளைக் கையாளும்போது கவனக்குறைவு ஏற்படும். ஜாக்கிரதை! குடும்பத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்பட ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசிக் கொள்ள வேண்டும். கூடுதல் செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியத்தை பேண உதவும்.

    மிதுனம்:

    புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள இது உகந்த நாள். உங்கள் நேர்மையான அணுகுமுறை காரணமாக பணியில் சாதிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். இன்று உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    கடகம்:

    இன்றைய நாள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். இன்று உங்களிடம் காணப்படும் மன உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    சிம்மம்:

    இன்று கடினமான சூழ்நிலை காணப்படும். அது உங்கள் நாளின் சீரான நிலையை பாதிக்கும். அதிகப் பணிகள் காணப்படும். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். உங்கள் குடும்பத்திற்காக சில தேவையற்ற செலவுகள் செய்வீர்கள். சோர்வு காரணமாக பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

    கன்னி:

    கடினமான சூழ்நிலைகளை கையாள பொறுமை அவசியம். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பதில் சிக்கல்கள் காணப்படும். உங்கள் துணையிடம் நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். இது உறவின் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும். தேவையற்ற செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் தாயின் உடல் நிலையில் பாதிப்பு காணப்படும்.

    துலாம்:

    விருந்தினர்கள் வருகை காரணமாக இன்று நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். பணியிடச் சூழல் இனிமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் காணப்படும். உங்கள் நேர்மையான அணுகுமுறை உங்கள் துணையை மகிழ்விக்கும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    விருச்சிகம்:

    உங்கள் இலக்குகளை அடைய இந்த நாள் அனுகூலமாக இருக்காது.பணியில் சில தவறுகளை நீங்கள் செய்ய நேரலாம்.சில கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும்.இன்று நிதிநிலைமை அபாரமாக இருக்கும். இன்று உங்களிடம் பதட்டம் காணப்படும். பிரார்த்தனை மற்றும் மந்திர ஜெபங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    தனுசு:

    நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.பொறுமையாக இருப்பதன் மூலம் நன்மை அடையலாம்.பணியில் நீங்கள் தவறுகள் செய்ய நேரலாம். உங்கள் துணையுடன் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்ள இயலாது. எனவே பொறுமையை மேற்கொள்ளுங்கள்.இன்று அதிக செலவுகள் செய்ய நேரலாம்.உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    மகரம்:

    இன்று தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். அமைதியாக இருப்பது நல்லது. அதிகப் பணிகள் காணப்படும். உங்கள் துணையிடம் பொறுமையின்றி நடந்து கொள்வீர்கள். இதனால் கடுமையான விவாதங்கள் இருவரிடையே ஏற்படலாம். பண வரவு எதிர்பார்த்த அளவுக்கு காணப்படாது. பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக நீங்கள் தலைவலி பாதிப்பிற்கு ஆளாகலாம்.

    கும்பம்:

    உங்கள் மனோதிடம் மற்றும் உற்சாகம் காரணமாக இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிபடுத்துவீர்கள். உங்கள் துணையிடம் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று நல்ல பண வரவு காணப்படும். உங்களிடம் காணப்படும் மன திருப்தி மற்றும் மகிழ்ச்சி காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

    மீனம்:

    புத்திசாலித்தனத்தை சரியான நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் இன்று சாதகமான பலன்கள் கிட்டும். உங்கள் பணியின் மூலம் கூடுதல் நற்பலன்கள் பெறுவீர்கள். இன்று உங்கள் இல்லற வாழ்வில் அன்பும் மகிழ்ச்சியும் பெருகும். சிறப்பாக சேமிக்க இயலும். புதிய முதலீடுகள் லாபகரமாக இருக்கும். மன உறுதி காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

    புதுமண தம்பதிகள் வெட்டிக் கொலை: கும்பகோணத்தில் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....