Monday, May 6, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதர நிர்ணய கழகத்தில் காலிப்பணியிடங்கள்- வெளிவந்த அறிவிப்பு

    தர நிர்ணய கழகத்தில் காலிப்பணியிடங்கள்- வெளிவந்த அறிவிப்பு

    புதுதில்லியில் செயல்பட்டு வரும் தர நிர்ணய கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    தலைநகரான புதுதில்லியில் செயல்பட்டு வரும் தர நிர்ணய கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணியிடங்களுக்கு வயதுவரம்பு 26.08.2022 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேதியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் எம்.எஸ்.சி பட்டம் பெற்று GATE-2020,2021,2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் GATE-2020,2021,2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதோடு, பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். 

    www.bis.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதியாக 26.08.2022 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை மேலும் அறிய, https://www.bis.gov.in/wp-content/uploads/2022/08/1-Detailed-AdvetisementEnglish-29-07-22.pdf என்ற இணையதள முகவரியை அனுகவும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....