Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு.. விண்ணப்பிக்க முந்துங்கள்

    இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு.. விண்ணப்பிக்க முந்துங்கள்

    இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    ஐசிஓஆர் – இன் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளில் பதவிகளுக்கு ஏற்றவாறு ஊதியமும், தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் ரூ.18,000 முதல் மாதம் ரூ.35,000 வரை ஊதியம் தரப்படுகிறது. அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை  இப்பணிகளுக்கு தகுதியுடையவர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.

    இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து haritha.agrico@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக ஆகஸ்ட் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....