Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வரும் தேர்தலில் மோசமான தோல்வியை திமுக சந்திக்கும் - செல்லூர் ராஜூ பேச்சு

    வரும் தேர்தலில் மோசமான தோல்வியை திமுக சந்திக்கும் – செல்லூர் ராஜூ பேச்சு

    2026 தேர்தலில் மோசமான தோல்வியை திமுக சந்திக்கும். அதிமுக ஆட்சி அமைக்கும் என செல்லூர் ராஜூ கருத்து. 

    மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை  இன்று நடைபெற்றது. 

    இதில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

    மதுரை மேயர் நிதியமைச்சரின் நிழலாகச் செயல்படுகிறார். மாநகராட்சியில் எந்தவொரு பணியும் செயல்படுத்தப்படவில்லை. மாநகராட்சி இயங்குகிறதா? என்பதே தெரியவில்லை.

    மேலும், செயல்படாத அரசாக உள்ள திமுக அரசு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒன்றும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றும் பேசி வருகிறது. உதயநிதிக்கு படம் வழங்காததால் பல படங்கள் முடங்கிக் கிடக்கிறது. முதல்வரின் மருமகன் சபரீசனின் கண் பார்வைக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். 

    அத்துடன், நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் கவலையில்லை. அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். முதல்வர் விளம்பரம் தேடாமல் மக்களுக்காகச் சிந்துத்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

    திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை என்றவர், 2026 தேர்தலில் மோசமான தோல்வியை திமுக சந்திக்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறாக செல்லூர் ராஜூ கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....