இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 310-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வானது இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தா வரை உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்த நிலநடுக்கத்தால் 310-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மீட்பு பணியினரும், பொதுமக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.
மேலும், இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 2000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 5300 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 13,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக, இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் தான் வேதனை அடைந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களில் விரைவில் ஆய்வு: எதற்கு தெரியுமா?