இராணுவ நாய் ஒன்று குண்டடிப்பட்டும் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்பதன்படி பயங்கரவாதிகளை தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்கப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, அந்த வீட்டிற்குள் நுழைவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில் அந்த வீட்டிற்கு ராணுவ ‘ஜூம்’ என்ற நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ‘ஜூம்’ சாமர்த்தியமாக பயங்கரவாதிகள் இருந்த அந்த வீட்டிற்கு நுழைந்தது. பயங்கரவாதிகள் ஜூமைக் கண்டனர். மேலும், ஜூமின் மீது இரண்டு துப்பாக்கிக் குண்டுகளை துளைத்தனர். இருப்பினும், ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்பதன்படி பயங்கரவாதிகளை தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்தது. இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், பலத்த காயங்களுடன் ஜூமிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
We wish Army assault dog ‘Zoom’ a speedy recovery. #Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/i1zJl0C2Gw
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) October 10, 2022
இதையும் படிங்க: 5ஜி அதிவேக இணையதள சேவை; தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டம் அறிவிப்பு