Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுண்டடி பட்டும் பயங்கரவாதிகளுடன் போராடிய நாய்..! இதுவல்லவா விசுவாசம்..!

    குண்டடி பட்டும் பயங்கரவாதிகளுடன் போராடிய நாய்..! இதுவல்லவா விசுவாசம்..!

    இராணுவ நாய் ஒன்று குண்டடிப்பட்டும் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்பதன்படி பயங்கரவாதிகளை தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்கப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில், ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, அந்த வீட்டிற்குள் நுழைவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில் அந்த வீட்டிற்கு ராணுவ ‘ஜூம்’ என்ற நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து,  ‘ஜூம்’ சாமர்த்தியமாக பயங்கரவாதிகள் இருந்த அந்த வீட்டிற்கு நுழைந்தது. பயங்கரவாதிகள் ஜூமைக் கண்டனர். மேலும், ஜூமின் மீது இரண்டு துப்பாக்கிக் குண்டுகளை துளைத்தனர். இருப்பினும், ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்பதன்படி பயங்கரவாதிகளை தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்தது. இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், பலத்த காயங்களுடன் ஜூமிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: 5ஜி அதிவேக இணையதள சேவை; தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டம் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....