வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் உலக கோப்பை போட்டியில், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலககோப்பையில் இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டுள்ளது. இந்த ஆட்டமானது மதியம் 1.30 மணியளவில் அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்பு களமிறங்கிய விராட் கோலி, கே.எல்.ராகுலுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷகிப் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் விராட்கோலியுடன் இணைந்தார். இந்திய அணிக்கு ரன்கள் வேகமெடுக்க தொடங்கியது. ஆனால், 30 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் மற்றும் அக்சர் படேல் தலா 7 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையும் படிங்க: ‘சபாஷ்’ உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பல்கலைக்கழக மானிய குழு! ஏன் தெரியுமா?
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தாலும், மறுபுறம் விராட் கோலி நிதானமாக ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். இருபது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 64 ரன்களுடனும், அஸ்வின் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து வங்கதேச அணி 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக வங்கதேச அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.
அந்த அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் ரன்களை குவிக்கத்தொடங்கினர். லிட்டன் தாஸ் அரை சதம் கடந்தார். 7 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி வங்கதேச அணி 66 ரன்கள் குவித்தது. இந்நிலையில், மழை குறுக்கிட ஆட்டமானது தடைபட்டது.
இதன் பின்னர், டக்-வொர்த் முறைப்படி வங்கதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. மழை முடிந்த பிறகு ஆட்டத்தின் போக்கு இந்திய அணிப் பக்கம் சாய்ந்தது. 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிட்டன் தாஸ் வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
இதைத்தொடர்ந்து, 16-வது ஓவரில் வங்கதேச அணி வெற்றிபெற 20 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 20 ரன்களுக்கு வங்கதேச அணி வெறுமனே 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்த திருப்பம்! பிரபல ரவுடிகள் 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்