Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு‘எனக்கு ஃப்ரீ வேண்டா’- ஆவேசத்தின் உச்சத்தில் வாதாடிய ரோஷக்கார மூதாட்டி

    ‘எனக்கு ஃப்ரீ வேண்டா’- ஆவேசத்தின் உச்சத்தில் வாதாடிய ரோஷக்கார மூதாட்டி

    கோவையில், அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி ஒருவர், ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் எனக்கூறி, பேருந்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    திமுக ஆட்சிக்கு வந்ததும், அரசு பேருந்தில் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், திமுக ஆட்சியில் பெண்கள் அனைவரும் ஓசியில் பயணம் செய்வதாக தெரிவித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட பல மூத்த அரசியல்  தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.அவர் பேசிய அந்த வார்த்தைகள் பெண்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலக்கரை நோக்கி சென்ற மகளிர் இலவசமாக பயணம் செய்யும் அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் ஏறினார். அவரிடம் நடத்துநர், இலவச டிக்கெட்டை கொடுத்தார். ஆனால், அதனை வாங்க மறுத்த மூதாட்டி அவரிடம் பணம் கொடுத்தார். அதனை வாங்க பேருந்து நடத்துநர் மறுத்துவிட்டார்.

    இதன்காரணமாக, கோபமடைந்த மூதாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காசு வாங்காவிட்டால் டிக்கெட் வாங்க மாட்டேன் என அழுத்தம் திருத்தமாக கூறினார். மேலும், ‘தமிழகமே பயணம் செய்தாலும் நான் காசு கொடுக்காமல் பயணிக்க மாட்டேன்’ என தெரிவித்தார். காசை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்குமாறு நடத்துநரிடம் அதட்டி கேட்டார்.

    அதைத்தொடர்ந்து, காசு வாங்க முடியாது என தெரிவித்த நடத்துநர், வேண்டுமனால் இறங்கி செல்லுமாறு கூறினார். இருப்பினும் தன் முடிவில் உறுதியாக இருந்த மூதாட்டி, பணத்தை கொடுத்து டிக்கெட் பெற்றார். மீதி சில்லரையையும் வாங்கினார். அருகில் இருந்த பயணிகள் சிரிப்பையும் பொருட்படுத்தாமல், ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் என தனது முடிவில் மூதாட்டி உறுதியாக இருந்தார். 

    இதனை அங்கிருந்த பயணி ஒருவர் காணொளியாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது காட்டுது தீ போல் வேகமாக பரவி வருகிறது 

    இந்த மூதாட்டி யார், எப்போது இந்த காணொளி எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் தெரியவில்லை.

    இதையும் படிங்க: போலி பத்திரப்பதிவினால் நிலத்தை இழந்த வாணிஸ்ரீ ! மீட்டு கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்த ஸ்டாலின்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....