மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, ஓரளவு நன்மை நடைபெறக் கூடிய நாட்களாகவே இருக்கின்றன. பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் இருப்பவர்களுக்கு சில நல்ல மாற்றங்கள் ஏற்படக் கூடும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். பொறுமை உங்களின் பலத்தை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உருவாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் அதிக அளவில் நடைபெறக் கூடிய நாட்களாக இருக்கின்றன. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தேவையான பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்து அமைதியாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறக் கூடிய நாட்களாக அமைகின்றன. நீங்கள் திட்டமிட்டு செய்யும் அணைத்து காரியங்களும் வெற்றி பெறும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் தோன்றி மறையும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் நிலவும். அலுவலகத்தில் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடகம்:
கடக ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு பிரச்சனைகள் குறைந்து மகிழ்ச்சி அலை வீசக்கூடியதாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அலுவலகத்தில் கூடுதல் வேலை சுமை இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவுகளிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, சற்று கவனமுடன் இருக்க வேண்டிய நாட்களாக இருக்கின்றன. தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதே சமயம் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் எப்போதும் போல் அமைதியான நிலை இருக்கும். வார்த்தைகளில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் மகிழ்ச்சியான நாட்களாகவே காணப்படுகின்றன. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே அன்பு கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீடு, மனை வாங்குதலில் சாதகமான சூழ்நிலை அமையும். குழந்தைகளால் செல்வது நேரிடும். இருப்பினும் அது மன மகிழ்ச்சியைத் தரும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடங்கியது