மராட்டியத்தில் மருத்துவ மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம், நான்தோட் மாவட்டம், பிம்பரி மஹிபால் கிராமத்தில் இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. சுபாங்கி ஜோக்தந்த் என்ற பெண் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கு பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், மாணவி தான் வேறொரு நபரை காதலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால், பெண் வீட்டார் மிகவும் கோபம் அடைந்தனர். ஆத்திரமடைந்த குடும்பத்தினர் தங்களது மகளை கொல்ல முடிவு செய்தனர். இதற்கென திட்டமும் தீட்டினர்.
அதன்படி, அந்த மாணவியின் தந்தை, சகோதரர், குடும்ப உறவினர்கள் இணைந்து மாணவியை அருகில் இருக்கும் பண்ணைக்கு அழைத்து சென்றனர். பிறகு, மாணவியின் கழுத்தை கயிற்றால் நெருக்கி கொன்றனர். மேலும் மாணவியின் உடலை தீயிட்டு கொளுத்தி எரித்தனர். அதோடு, கொலை செய்த அடையாளங்களை மறைக்க எரிந்த உடலை அருகில் இருக்கும் ஓடையில் வீசி எறிந்தனர்.
தற்போது மாணவியின் உடல் பாகங்கள் சிக்கிய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட தந்தை, சகோதரர், உறவினர் ஆகியோர் மாணவியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த விண்கல்; அப்டேட் சொன்ன நாசா