Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கில் கொலையாளிக்கு கடும் தண்டனை கிடைப்பது உறுதி: உள்துறை அமைச்சர் அமித்ஷா...

    நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கில் கொலையாளிக்கு கடும் தண்டனை கிடைப்பது உறுதி: உள்துறை அமைச்சர் அமித்ஷா…

    ஷ்ரத்தா வழக்கில் கொலையாளிக்கு கடும் தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

    தில்லியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, காதலன் அப்தாப்வால் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வழக்கு நாட்டையே உலுக்கியது. 

    இதில் குற்றவாளியான அப்தாப் கொலையை அவரே செய்ததாக ஒப்புக்கொண்டார். ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டு 35 துண்டங்களாக வெட்டி, அவற்றை தில்லியின் பல பகுதிகளில் வீசியதும் வாக்குமூலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு காதலன் அப்தாப் தன்னை துன்புறுத்துவதாகவும், தன்னை துண்டு துண்டாக வெட்டப் போவதாக ஷ்ரத்தா தனது கைப்பட எழுதி காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கின் விசாரணை மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 

    இதனிடையே தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஷ்ரத்தா வழக்கில் குற்றவாளியான அப்தாப்புக்கு கடும் தண்டனை கிடப்பது உறுதி செய்யப்படும். இந்த தண்டனை குறுகிய காலத்தில் கிடைப்பதை தில்லி காவல்துறையும் விசாரணை அமைப்பும் உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார். 

    மங்களூரு குண்டுவெடிப்பு: இலக்கை அடையவில்லை என்றாலும், வெற்றியாக கருதுவதாக இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....