Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்திய கருக்கலைப்பு உரிமை தீர்ப்பு: ஒரு பார்வை

    அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்திய கருக்கலைப்பு உரிமை தீர்ப்பு: ஒரு பார்வை

    அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.

    இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் மாற்றப்படும். கருக்கலைப்பு நடைமுறைக்கு தடை விதிக்க இனி மாகாணங்கள் ஒவ்வொன்றாக நடவடிக்கை மேற்கொள்ளும். அநேகமாக அமெரிக்கா மாகாணங்களில் பாதியாவது கருக்கலைப்புக்கு தடை விதிக்க ஏதுவாக புதிய சட்டம் அல்லது கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் பிறகு நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் இதுவே இறுதியானது இல்லை என்று கருத்து கூறியுள்ளனர்.

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. மற்றவை சில புதிய கட்டுப்பாடுகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது. மொத்தத்தில், கருத்தரிக்கும் வயதுடைய சுமார் 36 மில்லியன் பெண்கள் கருக்கலைப்புக்காக செல்ல முடியாத நிலையை இது ஏற்படுத்தும் என்று பிளாண்ட் பேரன்ட்ஹுட் என்ற கருக்கலைப்பு சேவை வழங்கும் சுகாதார அமைப்பு கூறுகிறது.

    ரோ Vs வேட் – என்றால் என்ன?

    1969 ஆம் ஆண்டில், ‘ஜேன் ரோ’ என்ற புனைப்பெயரைக் கொண்டு நார்மா மெக்கோர்வி என்ற 25 வயதான திருமணமாகாத பெண் ஒருவர், டெக்சாஸில் உள்ள குற்றவியல் கருக்கலைப்புச் சட்டங்களை எதிர்த்து வழக்கு தொடுத்தார். தாயின் உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலைகளைத் தவிர, மற்ற நிலைகளில் கருக்கலைப்பு செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்று வழக்கில் டெக்சாஸ் நீதிமன்றம் தடை விதித்தது. கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை ஆதரிப்பவர் ஹென்றி வேட். அவர் டல்லாஸ் மாகாணத்தின் வழக்கறிஞர். அதனால், இந்த வழக்கு ரோ Vs வேட் என்று அழைக்கப்படுகிறது.

    நார்மா மெக்கோர்வி வழக்கு தொடுத்தப்போது, தனது மூன்றாவது குழந்தையுடன் அவர் கர்ப்பமாக இருந்தார். மேலும் அவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டதாகக் கூறினார். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவர் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த 1973ஆம் ஆண்டில் அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு அவரது வழக்கை சாண்ட்ரா பென்சிங் என்ற 20 வயதான ஜார்ஜியா பெண் தொடுத்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது. டெக்சாஸ் மற்றும் ஜோர்ஜாவில் கருக்கலைப்புச் சட்டங்கள் அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிராக இருக்கிறது என்று அவர்கள் வாதிட்டனர். ஏனெனில், அவை ஒரு பெண்ணின் தனி மனித உரிமையை மீறுகின்றன என்று அவர்கள் வாதிட்டனர்.

    இந்த விவகாரத்தில், ஏழுக்கு இரண்டு வாக்குகள் மூலம், கருக்கலைப்பைத் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கர்ப்பத்தைக் கலைக்கும் ஒரு பெண்ணின் உரிமையை அமெரிக்க சட்டம் பாதுக்காக்கும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

    இந்த வழக்கு ‘டிரைமெஸ்டர்’ (மூன்று மாத கணக்கு) முறையை உருவாக்க அனுமதிக்கிறது.

    அதாவது:

    • கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமை தரப்படுகிறது.
    • இரண்டாவது மூன்று மாதங்களில், சில அரசுக் கட்டுப்பாடுகளுடன் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
    • கருப்பைக்கு வெளியே வாழக்கூடிய கட்டத்தை அந்த சிசு நெருங்கி விடுவதால், கடைசி மூன்று மாதங்களில் கருக்கலைப்புகளை கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ மாகாணங்களுக்கு உரிமை அளிக்கப்படுகிறது.

    ரோ Vs வேட் வழக்கில், இறுதி மூன்று மாதங்களில், ஒரு பெண்ணின் உயிரையோ உடல்நலத்தையோ காப்பாற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் சான்றளித்தால் மட்டுமே எந்தவொரு சட்டபூர்வ தடையையும் மீறி கருக்கலைப்பு செய்ய முடியும் என்பதை வலியுறுத்தியது.

    கருக்கலைப்புக்கு ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள்:

    அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு முன்பே, கருக்கலைப்பை எதிர்க்கும் குரல்கள் அங்கு வலுப்பெற்றுள்ளன. 1980ஆம் ஆண்டில், ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசியம் இருக்கும் நிலையைத் தவிர, கருக்கலைப்புக்கு அரசு நீதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் 1989ஆம் ஆண்டில், அரசு மருத்துவமனைகளில் அல்லது அரசு ஊழியர்களால் கருக்கலைப்பு செய்வதைத் தடை செய்ய மாகாணங்களுக்கு அனுமதி அளித்தது. 1992ஆம் ஆண்டு, மற்றொரு முக்கிய வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியது.

    மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ய மாகாணங்கள் கட்டுப்பாடு விதிக்கலாம் என்று அந்த தீர்ப்பு கூறியது. இதன் விளைவாக, பல மாகாணங்கள் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இளம் கர்ப்பிணிகள் கருக்கலைப்பு குறித்து எடுக்கப்படும் முடிவில், அவர்களின் பெற்றோர்களோ ஒரு நீதிபதியோ தலையிட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

    மேலும், ஒரு பெண் கருக்கலைப்பு கிளினிக்கிற்கு செல்லும் நேரத்திற்கும், கருக்கலைப்பு செய்யப்படும் சமயத்திற்கு இடையில் உள்ள காத்திருக்கும் நேரம் போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கெனவே பிற மாகாணங்களில் உள்ளன.

    இதன் விளைவாக, பல பெண்கள் கருக்கலைப்பு செய்ய அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலும் மாகாணங்களின் எல்லைகளைத் தாண்டி, அவர்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது.

    இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! – சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....