Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாநகராட்சிகளுக்கு புதிய பணியிடங்கள்; இனிமே இப்படித்தான்...

    மாநகராட்சிகளுக்கு புதிய பணியிடங்கள்; இனிமே இப்படித்தான்…

    ஒவ்வொரு மாநகராட்சியும் குறிப்பிட்ட நான்கு பிரிவுகளைக் கொண்டு இயங்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    மாநகராட்சிகளுக்கு புதிய பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிவந்துள்ள அரசாணையில், நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்போது, மாநகராட்சிகளில் உருவாக்கப்படாத நகராட்சி பணியிடங்களை, மாநகராட்சி பணியிடங்களுக்கு இணையாக எவ்வாறு பொருத்துவது என்பது குறித்து, பொது அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மாநகராட்சிகளில் வார்டு அலுவலகம் அமைத்தல், மைய அலுவலகங்களை மறுசீரமைத்தல் தொடர்பான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாநகராட்சியும் பினவரும் நான்கு பிரிவுகளைக் கொண்டு இயங்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    புதிய பணியிடங்கள் :

    (1) பணியாளர் பிரிவு 

    (2) வருவாய் மற்றும் கணக்கு பிரிவு 

    (3) பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு 

    (4) பொது சுகாதாரப் பிரிவு 

    மேலும், மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்கவும் மற்றும் முறைப்படுத்தவும் அந்த அரசாணையில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....