நாத்வாரா நகரத்தில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக 5ஜி சேவையை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதனிடையே, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் பார்தி எரிதல் நிறுவனங்கள், 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5 ஜி சேவையை அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளும் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய நகரங்களில் 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா நகரத்தில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அங்குள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்த றிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஏற்கனவே, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக ஒவ்வொரு நகரங்களுக்கும் 5ஜி சேவை கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள்; சம்பளம் எவ்வளவு தெரியுமா?