ஆஸ்திரேலியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்ட்டில் வடக்கு கடற்கரையில் வானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்தக் கடற்கரை ஆஸ்திரேலியாவில் மிகவும் புகழ்ப்பெற்ற கடற்கரையாகும். இந்நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்தனர். ஜனவரி மாதம் முழுவதுமே இங்கு சற்று கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
இந்நிலையில், இன்று சுற்றுலா தலத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. அதே சமயம் மற்றொரு ஹெலிகாப்டர் தரையிறங்கிய பொழுது 2 ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதின.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண் சடலத்தை காரில் இழுத்துச் சென்ற கொடூரம்; தலைகுனிகிறேன் என ஆளுநர் பதிவு