வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வலசைக்கு வந்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்து உள்ளது பெயர் போன வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வலசைக்கு வருவது வழக்கம். குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வித்தியாசமான பறவைகள் வருகின்றன.
அந்த வகையில் பாம்பு தாரா, அரிவாள் மூக்கன், வர்ணனாரை, ஊசிவால் வாத்து உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் வருகை தருவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் இந்த ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தந்துள்ளன. ஏரி நிரம்பி இருப்பதால் பறவைகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.
தற்போது அரையாண்டு மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக நேற்று சுற்றுலா பயணிகளின் வருகையும் பறவை ஆர்வலர்களின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அவர்கள் வித்தியாசமான பறவைகளை கண்டு மகிழ்ந்தனர்.
வேடந்தாங்கல் #vedanthangal Bird Sanctuary is almost looking house full 🙂 #chennnairains @ChennaiRains the area can further be extended for the benefit of migrant birds. pic.twitter.com/xuu6GHGdnk
— tc (@iamthirlok) December 21, 2022
பத்திரிகையாளரை மிரட்டினார்களா ரஜினி ரசிகர்கள்; வைரலாகும் காணொளி..