Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅஞ்சலகம் அமைக்கப்படாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தவோம் என எச்சரித்த கிராம மக்கள்

    அஞ்சலகம் அமைக்கப்படாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தவோம் என எச்சரித்த கிராம மக்கள்

    கிளை அஞ்சலகம் அமைக்கப்படாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக இப்பகுதி கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகனி ஊராட்சியில் நந்தியநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. ஐந்தாயிரத்தும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமத்தில் 3000க்கும் மேற்பட்ட வாக்காளர்களும், 1200 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களும் வசிக்கின்றனர். 

    மேலும், இந்த நந்தியநல்லூர்  கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. இக்கிராமத்திலிருந்து தபால் நிலையம் செல்ல வேண்டுமானால் கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பத்து தபால் நிலையம் மட்டுமே செல்ல வேண்டும். 

    இந்த தபால் நிலையம் பேருந்து வசதி இல்லாத சாலையில் அமைந்துள்ளதால் இப்பகுதி கிராம மக்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறி, இப்பகுதி கிராம மக்கள் சார்பில் திருச்சி மண்டல பொது அஞ்சல் தலைவர், மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை அஞ்சல் தலைமை தபால்நிலைய அதிகாரி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை ஏற்று விரைவில் நந்தியநல்லூர் பகுதிக்கு கிளை அஞ்சலகம் அமைக்கப்படாவிட்டால் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக இப்பகுதி கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறுவட்ட விளையாட்டு போட்டி.. ஆர்வத்துடன் பங்கேற்கும் மாணவர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....