Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுறுவட்ட விளையாட்டு போட்டி.. ஆர்வத்துடன் பங்கேற்கும் மாணவர்கள்

    குறுவட்ட விளையாட்டு போட்டி.. ஆர்வத்துடன் பங்கேற்கும் மாணவர்கள்

    கடலூர் மாவட்டத்தில் குறுவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் இன்று பெண்கள் பிரிவினர் கலந்துக்கொள்கின்றனர். 

    கடலூர் மாவட்டத்தில் குறுவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நேற்று (ஆகஸ்ட் 25) துவங்கியது. இந்த போட்டியானது கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    மேலும், இப்போட்டியில் கடலூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட 53 பள்ளிகளை சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.  இந்த போட்டி அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவிகளாக தடகளப் போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 வயதுக்குட்பட்டவர்கள், 19 வயதுக்குட்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற உள்ளது.

    இத்துடன் இந்த குறுவட்ட போட்டிகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் போன்ற மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், நேற்று துவக்க விழாவில் ஆண்கள் பிரிவினருக்கு மட்டும் போட்டி நடத்தப்பட்ட நிலையில் பெண்கள் பிரிவினருக்கு இன்று போட்டி நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ‘வெந்து தணிந்தது காடு’ குழுவின் அசத்தலான ஆல்பம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular