Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். 

    பாரிமுல்லா மாவட்டம் உரி செக்டாரின் கமல்கோட் பகுதி வழியாக சில பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுப்பட்டனர். அப்போது, அவர்களுக்கும் அங்கு காவலில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். 

    மேலும், சம்பா பகுதியில் சர்வதேச எல்லையில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகக் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதை வீரர்கள் கண்டுள்ளனர். 

    இதைத்தொடர்ந்து, அவரை நோக்கி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். காயமடைந்த அந்த நபர் பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அந்த நபர் விட்டு சென்ற பைகளை சோதனையிட்டபோது, அதில் 8 கிலோ போதைப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது.  

    குழந்தையை தலாட்டி தூங்க வைத்த பெண் காவலர்கள் – மக்கள் பாராட்டு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular