அடமான கடன் வழங்கும் நிறுவனமான எச்.டி.எப்.சி. நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
- எச்.டி.எப்.சி. நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,700 கோடி ஈட்டியுள்ளது.
- இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 16 சதவீதம் அதிகமாகும்.
- 2021 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.3,180 கோடி ஈட்டியிருந்தது.
- 2022 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் நிகர வட்டி வருவாயாக ரூ.4,601 கோடியாக உள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும்.
- அந்த காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் நிகர வட்டி வருவாயாக ரூ.4,027 கோடி ஈட்டியிருந்தது.
- எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2022 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.30 டிவிடெண்ட் அறிவித்துள்ளது.
- கடந்த மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் மொத்த தனிநபர் வாராக் கடன்கள் 1.44 சதவீதமாகவும், மொத்த தனிநபர் அல்லாத வாராக் கடன்கள் 5.04 சதவீதமாகவும் உள்ளது.
- மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எச்.டி.எப்.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.37 சதவீதம் உயர்ந்து ரூ.2,214.30ஆக இருந்தது.
- முடிவாக எச்.டி.எப்.சி. நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,700 கோடி ஈட்டியுள்ளது.
- 7000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறை சாதனை!
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.