குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 21-ம் தேதி 5 ஆயிரத்து 529 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடந்தது. ஆனால், மாதக்கணக்கில் காலங்கள் சென்றும் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், எப்போது முடிவுகள் வருமென்று பரீட்சை எழுதியவர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் அறிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்றம் வழங்கிய மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான உத்தரவை செயல்படுத்தும் விதமாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைவில் முடிவடையவுள்ளது. ஆதலால், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியேறும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அனுகுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், இலங்கைக்கு கீழ் இந்தியா; எத்தனாவது இடம் தெரியுமா?