இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
புத்தாடை உடுத்தியும் இனிப்புகள் வழங்கியும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மேலும் பட்டாசுகள் வெடித்து உறவுகளுடன் சந்தோஷத்தை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தீப ஒளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அப்போதான்டா இறங்குமுகம்..இப்போ நான் ஏறுமுகம் – இலாபத்தில் நெட்ஃபிளிக்ஸ் !