ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளதாவது:
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம் போல இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.
சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும்!
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் மின்சார ஸ்கூட்டர் விபத்து; பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு