ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிகவும் புகழ்பெற்ற வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை தினங்களன்று மக்கள் வருவது வழக்கமான ஒன்று. ஆனால், பராமரிப்புப் பணி காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும்.
இந்நிலையில், நாளை ஆயுத பூஜை விடுமுறை என்பதால் பொதுமக்கள் வருகை தரும் பொருட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்குமா என்ற கேள்வி மக்களிடத்தில் இருந்து வந்தது. இச்சூழலில், வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கம்போல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு நாளை அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்றே நாட்களில் பொன்னியின் செல்வன் நிகழ்த்திய வசூல் சாதனை? வியந்து போன திரையுலகம்..