மராட்டியத்தில் சார்ஜ் செய்யும்போது மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம், பாலகர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் மின்சார இருசக்கர வாகனத்தை சார்ஜ் செய்யும் போது, அதன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இந்தச் சம்பவத்தில் 7 வயதுடைய சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அந்தச் சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டான். பிறகு, சிகிச்சை பலனின்றி, அந்தச் சிறுவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச் சிறுவனின் பெயர் ஷபீர் ஷாநவாஸ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இதுகுறித்து மாணிக்போர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சார்ஜ் செய்யும்போது மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரபலங்களை மட்டும்தான் கண்டுபிடிப்பீர்களா ? இவரும் அப்படிப்பட்டவர்தான்,கண்டுபிடியுங்கள் பார்ப்போம் .