முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு 1,337.76 கோடி ரூபாய் இந்திய தொழில் போட்டி ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
ஆண்ட்ராய்டு அறிதிறன் பேசிகளில் முதன்மையான இடத்தை பெறும் நோக்கில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் சிசிஐ விசாரணை நடத்தியது.
சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் சந்தையில் இடத்தைப் பிடிப்பதற்கான நோக்கில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அந்த ஆணையம் உறுதி செய்தது.
இதையடுத்து, கூகுள் நிறுவனத்துக்கு 1,337.76 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய தொழில் போட்டி ஆணையம் நேற்று (அக்டோபர் 20) வியாழக்கிழமை அறிவித்தது.
இதுமட்டுமின்றி, முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கூகுள் நிறுவனம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இருக்கும் கால இடைவெளிக்குள் தனது வர்த்தக செயல்பாட்டு முறையை கூகுள் நிறுவனம் மாற்றிக் கொள்ள வேண்டும் என இந்திய தொழில் போட்டி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொன்னதை செய்வார் பிரதமர் மோடி! இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக, அண்ணாமலை போட்ட ட்வீட்