சென்னை: 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நமது நாட்டிற்கு சேவை செய்யக் காத்திருக்கும் 75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார்.
நமது நாட்டிற்கு சேவை செய்யக் காத்திருக்கும் 75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
சொன்னதை செய்வார் மோடி!
இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். (1/2)
— K.Annamalai (@annamalai_k) October 20, 2022
இதையும் படிங்க:பண்டிகை காலத்திலும் குறைந்து வரும் தங்கத்தின் விலை: மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்